செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ளாட்சி மன்ற தேர்தலில் 912 வேட்பு மனுதாக்கல்


செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ளாட்சி மன்ற தேர்தலில் 912 வேட்பு மனுதாக்கல்
x
தினத்தந்தி 19 Sep 2021 11:37 AM GMT (Updated: 19 Sep 2021 11:37 AM GMT)

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் நேற்று மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு ஒருவர், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 11 பேர், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 72 பேர், கிராம வார்டு உறுப்பினர் பதவிக்கு 463 பேர் என மொத்தம் 547 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 வேட்பு மனுக்களும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 16 வேட்பு மனுக்களும், 5 ஒன்றியங்களில் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 51 மனுக்களும், சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 296 வேட்புமனுக்களும் என மொத்தம் 365 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

Next Story