பஸ் மோதி காவலாளி பலி


பஸ் மோதி காவலாளி பலி
x
தினத்தந்தி 22 Sep 2021 12:16 AM GMT (Updated: 22 Sep 2021 12:16 AM GMT)

பஸ் மோதி காவலாளி பலியானார்.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த நாட்டரசன்பட்டு பகுதியில் உள்ள துலுக்கானத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்துரு இவருடைய மகன் ஜானகிராமன் (வயது 43). இவர் செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி அருகே உள்ள தனியார் கல்லூரியில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் படப்பை அடுத்த ஆரம்பாக்கம் கூட்டுச்சாலை அருகே வண்டலூர்-வாலாஜாபாத் சாலையை கடக்கும் போது காஞ்சீபுரத்தில் இருந்து தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் ஜானகிராமன் மீது வேகமாக மோதியது.

சாவு

இதில் ஜானகிராமன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் போலீசார் படுகாயம் அடைந்த ஜானகிராமனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஜானகிராமன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story