குண்டர் தடுப்புச் சட்டத்தில் 4 பேர் கைது


குண்டர் தடுப்புச் சட்டத்தில் 4 பேர் கைது
x
தினத்தந்தி 22 Sep 2021 11:48 PM GMT (Updated: 22 Sep 2021 11:48 PM GMT)

குண்டர் தடுப்புச் சட்டத்தில் 4 பேர் கைது மாவட்ட கலெக்டர் உத்தரவு.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் உட்கோட்டம், சாலவாக்கம் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட மதூர் கிராமத்தை சேர்ந்த முத்து (வயது56), கண்ணன் (50), நித்யானந்தம் (24) மற்றும் பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் கொலை, கொலை முயற்சி, அடிதடி மற்றும் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட கோவிந்தவாடி அகரம் கிராமத்தை சேர்ந்த புருஷோத்தமன் (32) ஆகிய 4 பேரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் பரிந்துரைத்தார். அதன் பேரில், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி 4 பேரையும் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார்.

Next Story