பிளஸ்-2 மாணவி தற்கொலை


பிளஸ்-2 மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 24 Sep 2021 9:18 PM GMT (Updated: 24 Sep 2021 9:18 PM GMT)

பிளஸ்-2 மாணவி தற்கொலை

வாடிப்பட்டி
வாடிப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டி நாட்டாமைக்கார தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் பவித்ரா தேவி(வயது 17). இவர் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் இருந்தபோது வீட்டு வேலை செய்யவில்லை என்று பெற்றோர் சத்தம் போட்டதாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த பவித்ரா வீட்டின் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது சம்பந்தமாக வாடிப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story