சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல்


சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 26 Sep 2021 11:23 AM GMT (Updated: 26 Sep 2021 11:23 AM GMT)

சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு பார்சலில் கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சரக்கக பிரிவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்ல வந்த கொரியா் பாா்சல்களை சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனா். அமெரிக்காவுக்கு அனுப்ப இருந்த 4 பாா்சல்களில், 2 பாா்சல்கள் சென்னை எத்திராஜ் சாலையில் உள்ள முகவரியிலும், 2 பாா்சல்கள் சென்னை சேத்துப்பட்டு முகவரியிலும் பதிவு செய்யப்பட்டு இருந்தது. 4 பாா்சல்களையும் டெல்லியை சேர்ந்த ஒருவரின் பெயரில் அனுப்பப்பட இருந்தது. அந்த பார்சல்களில் ஆவணங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தன.

இதனால் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அந்த பாா்சல்களில் இருந்த செல்போன் எண்களை தொடா்பு கொண்டனா். ஆனால் அதில் இருந்த செல்போன் எண்கள், முகவரி அனைத்துமே போலியானவை என்று தெரியவந்தது. சென்னையில் பதிவு செய்திருந்த ஏஜென்சி நிா்வாகிகளிடம் விசாரணை நடத்தினா். அப்போது டெல்லியை சோ்ந்த ஒருவா், ஆன்லைன் மூலம் இந்த பாா்சல்களை சென்னை முகவரியில் பதிவு செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து 4 பாா்சல்களையும் சுங்க இலாகா அதிகாரிகள் பிரித்து பாா்த்தனா்.

போதை மாத்திரைகள்

அந்த பாா்சல்களில் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் இருந்தன. 4 பார்சல்களில் மொத்தம் 4,180 போதை மாத்திரைகள் இருந்தன. இந்த மாத்திரைகள் உடல் வலிமை மற்றும் சக்திக்காக என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாத்திரைகள் போதை மாத்திரைகளாக பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்த மாத்திரைகள் தயாரிப்பிற்கும், விற்பனைக்கும் இந்திய அரசு தடை விதித்து உள்ளது. வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. மத்திய அரசின் மருந்து கட்டுப்பாட்டு துறையின் அனுமதியுடன் மட்டுமே அனுப்ப முடியும். ஆனால் வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சி நடந்து உள்ளது.

இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் போதை பொருள் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து 4,180 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா். இந்த மாத்திரைகளின் மதிப்பு சுமாா் ரூ.20 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. போலி முகவரியில் இந்த போதை மாத்திரை பாா்சல்களை அமெரிக்காவுக்கு அனுப்ப முயன்ற டெல்லி நபரை தேடி வருகின்றனா்.

கஞ்சா

அதேபோல் அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து பரிசு பொருள் என்று குறிப்பிடப்பட்டு சென்னை முகவரிக்கு வந்த 3 பார்சல்களை சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் பிரித்து பாா்த்தனா். அந்த பார்சல்களில் பரிசு பொருட்களுக்கு பதிலாக பதப்படுத்தப்பட்ட உயா்ரக கஞ்சா இருந்ததை கண்டு அதிா்ச்சி அடைந்தனா். 3 பாா்சல்களில் இருந்து 194 கிராம் உயா் ரக கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

சென்னை விமான நிலைய சரக்கக பிரிவில் ஒரே நாளில் அமெரிக்காவுக்கு கடத்த முயன்ற போதை மாத்திரைகள், சென்னைக்கு கடத்தி வந்த உயா் ரக கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story