கரும்பு ஆலை, பால்பண்ணையில் தீ விபத்து


கரும்பு ஆலை, பால்பண்ணையில் தீ விபத்து
x
தினத்தந்தி 27 Sep 2021 9:06 PM GMT (Updated: 27 Sep 2021 9:06 PM GMT)

வாடிப்பட்டி அருகே கரும்பு ஆலை, பால்பண்ணையில் தீப்பிடித்தது. இதில் அங்கிருந்த பொருட்கள் எரிந்து சேதமானது

வாடிப்பட்டி
வாடிப்பட்டி அருகே கரும்பு ஆலை, பால்பண்ணையில் தீப்பிடித்தது. இதில் அங்கிருந்த பொருட்கள் எரிந்து சேதமானது.
தீப்பிடித்தது
வாடிப்பட்டி அருகே கொண்டையம்பட்டி ஓட்டுபட்டியைச் சேர்ந்தவர் சகாதேவன் (வயது 62). இவருக்கு சொந்தமான கரும்பு தோட்டம் செம்புக்குடிபட்டியில் உள்ளது. அந்த தோட்டத்தையொட்டி அலங்காநல்லூர் சாலையில் கரும்பாலை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை திடீரென்று ஏற்பட்ட மின்கசிவு காரணத்தால் கரும்பு ஆலை மேற்கூரையில் தீப்பிடித்தது. அந்த தீ மளமளவென பரவியது. 
இதனால் வெல்லம் காய்ச்ச வைத்திருந்த கொப்பரை மற்றும் அங்கு வைக்கப்பட்டிருந்த கரும்புச்சக்கை உபகரண பொருட்கள், 3 தென்னைமரங்கள் முழுவதும் எரிந்து நாசமானது. 
பொருட்கள் சேதம்
மேலும் அந்த கருப்பாலையையொட்டி அதே ஊரைச் சேர்ந்த ராஜாங்கம் மனைவி கனகம் என்பவர் நடந்தி வந்த பால் பண்ணை தீ பரவியது. இதனால் பால் பண்ணையின் மேற்கூரை மற்றும் பால் கேன் உள்ளிட்ட பொருட்களும் எரிந்து சேதமானது. இதன் சேத மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என தெரிகிறது. 
தீ விபத்து குறித்து தகவலறிந்த அலங்காநல்லூர் தீயணைப்பு நிலைய தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story