திருவள்ளூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு


திருவள்ளூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
x
தினத்தந்தி 30 Sep 2021 10:13 AM GMT (Updated: 30 Sep 2021 10:13 AM GMT)

திருவள்ளூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருடப்பட்டது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் தகனிக்கோட்டையை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 45). நேற்று முன்தினம் வேல்முருகன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வீட்டை பூட்டிவிட்டு வேலை காரணமாக வெளியே சென்றார். இரவு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த துணிமணிகள் அனைத்தும் சிதறி கிடந்தன.

நகை-பணம் திருட்டு

வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 4 பவுன் தங்க நகைகள், 3 கிலோ வெள்ளி பொருட்கள், ரொக்கப்பணம் ரூ.78 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது.

இது குறித்து அவர் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story