ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 109 பேருக்கு கொரோனா


ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 109 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 30 Sep 2021 9:34 PM GMT (Updated: 30 Sep 2021 9:34 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக 109 பேருக்கு தொற்று உறுதியானது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 8 ஆயிரத்து 315 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 116 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று புதிதாக 109 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 1,906 ஆக உயர்ந்தது. இதில் 1 லட்சத்து 54 பேர் குணமடைந்தார்கள். நேற்று மட்டும் 121 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளார்கள். தற்போது 1,182 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை கொரோனாவுக்கு 670 பேர் பலியாகி உள்ளனர்.

Next Story