தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று


தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா  தொற்று
x
தினத்தந்தி 1 Oct 2021 3:07 PM GMT (Updated: 1 Oct 2021 3:07 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 13பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 55 ஆயிரத்து 874 ஆக உள்ளது. நேற்று 16 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவில் இருந்து 55 ஆயிரத்து 296 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளில் 174 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தூத்துக்குடியை சேர்ந்த 70 வயது மூதாட்டி கொரோனா பாதிப்பு காரணமாக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பரிதாபமாக இறந்து உள்ளார். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 404 ஆக அதிகரித்து உள்ளது.


Next Story