நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மேலும் 38 பேருக்கு கொரோனா


நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மேலும் 38 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 6 Oct 2021 10:43 PM GMT (Updated: 6 Oct 2021 10:43 PM GMT)

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மேலும் 38 பேருக்கு கொரோனா

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் நேற்று 23 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49ஆயிரத்து 18ஆக அதிகரித்துள்ளது. நேற்று 10பேர் உள்பட இதுவரை 48 ஆயிரத்து 360பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 228பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 
தென்காசி மாவட்டத்தில் ஒருவருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை 27 ஆயிரத்து 298பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 3 பேர் உள்பட இதுவரை 26ஆயிரத்து 776பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 38பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 14 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்து 952 ஆக உள்ளது. நேற்று 14 பேர் உள்பட 55 ஆயிரத்து 370 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 177 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story