வாலிபரிடம் செல்போன் பறித்தவர் கைது

x
தினத்தந்தி 10 Oct 2021 7:34 PM IST (Updated: 10 Oct 2021 7:34 PM IST)
வாலிபரிடம் செல்போன் பறித்தவர் கைது
கோவை
கோவை சிங்காநல்லூர் அண்ணா நகரை சேர்ந்தவர் பரணிதரன் (வயது 19). இவர், நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் கிருஷ்ணா கார்டன் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை, வாலிபர் ஒருவர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டினார். பின்னர் அவர், பரணிதரனிடம் இருந்த செல்போனை பறித்து விட்டு தப்பி சென்று விட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பரணிதரனிடம் செல்போன் பறித்தது நீலிகோணம்பாளையத்தை சேர்ந்த அரவிந்த் குமார் (19) என்பது தெரியவந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





