சேலம் மாவட்டத்தில் மேலும் 55 பேருக்கு கொரோனா பாதிப்பு


சேலம் மாவட்டத்தில் மேலும் 55 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 19 Oct 2021 2:17 AM IST (Updated: 19 Oct 2021 2:17 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் மேலும் 55 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம்
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 56 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று மேலும் 55 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி பகுதியில் 11 பேர், எடப்பாடியில் 3 பேர், கொளத்தூர், நங்கவள்ளி, சங்ககிரி, ஆத்தூர் பகுதியில் தலா 2 பேரும் உள்பட வெளி மாவட்டங்களில் இருந்து சேலத்திற்கு வந்தவர்கள் உள்பட நேற்று 55 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 99 ஆயிரத்து 105 ஆக அதிகரித்துள்ளது. நேற்று கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 62 பேர் குணமடைந்துவிட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அதேசமயம், ஆஸ்பத்திரிகளில் 554 பேர் நோய் தொற்றுக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

1 More update

Next Story