ம.தி.மு.க.வை உடைக்கலாம் என்ற சிலரது நினைப்பு நடக்காது-மதுரையில் வைகோ பேட்டி


ம.தி.மு.க.வை உடைக்கலாம் என்ற சிலரது நினைப்பு நடக்காது-மதுரையில் வைகோ பேட்டி
x
தினத்தந்தி 22 Oct 2021 7:42 PM GMT (Updated: 22 Oct 2021 7:42 PM GMT)

ம.தி.மு.க.வை உடைக்கலாம் என்ற சிலரது நினைப்பு நடக்காது என மதுரையில் அளித்த பேட்டியில் அக்கட்சி பொதுச் செயலாளர் வைகோ கூறினார்

மதுரை, 

ம.தி.மு.க.வை உடைக்கலாம் என்ற சிலரது நினைப்பு நடக்காது என மதுரையில் அளித்த பேட்டியில் அக்கட்சி பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

மதுரை வந்த வைகோ

ெசன்ைனயில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த ம.தி.மு.க. பொதுச்்செயலாளர் வைகோ, விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
துரை வைகோவுக்கு கட்சி பதவி வழங்கியதில் எதிர்ப்புகள் வந்துள்ளதாக கூறுவது அப்பட்டமான பொய். நேரடியாக தேர்வு செய்ய பொதுச் செயலாளருக்கு அதிகாரம் இருந்தும், ரகசிய வாக்கெடுப்பு நடத்தியே அவர் தேர்வு செய்யப்பட்டார். 2 பேர் தவிர 104 பேர் தேர்தல் எதற்கு? என கேட்டார்கள்.
தேர்தல் நடப்பதை போல வாக்குப்பெட்டி வாங்கி, ரகசியமாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் 106 பேரில் 104 பேர் துரை வைகோ ம.தி.மு.க.விற்கு வரவேண்டுமென்று வாக்களித்து இருந்தனர். 

தகுதி வந்துவிட்டது

தொண்டர்களின் பல்வேறு நிகழ்வுகளில் துரை வைகோ பங்கேற்று வருகிறார். அவருக்கு உயரிய பதவியை அளிக்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் கூறியதால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் அவர் அரசியலுக்கு வருவதில் எனக்கு விருப்பமில்லை. இதை பலமுறை சொல்லிவிட்டேன். 
அரசியல் ஒரு சூழல். இதில் மாட்டிக் கொண்டால் நிறைய பிரச்சினைகள் வரும். நிம்மதி இருக்காது. இதையும் அவருக்கு பல முறை அறிவுரையாக கூறினேன். துரை வைகோவுக்கு தகுதி வந்துவிட்டது. மேடையில் நன்றாக பேசுகிறார். அவரது பேட்டியை பார்த்து விட்டு காவல்துறை முன்னாள் உயர் அதிகாரி ஒருவர், அருமையான தலைவர் உருவாகி வந்துள்ளார் என்று சொன்னார்.

நடக்காது

ம.தி.மு.க.வை உடைக்கலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். அது நடக்காது. கட்சியில் இருந்து ஒரு சிலர் வெளியேறி உள்ளார்கள். அது கட்சிக்கு நல்லதாகவே முடியும். ம.தி.மு.க.வில் எந்த குழப்பமும் இல்லை, கட்சி வலுவாக உள்ளது.
மாநில இளைஞரணி செயலாளர் ஈசுவரன், என்னால் தொடர்ந்து போக முடியாததால் விலகிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளாரே தவிர வேறு எந்த குற்றச்சாட்டும் கூறவில்லை.
உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற விமான நிலைய திறப்பு விழாவில், ராஜபக்சே மகனை விருந்தினராக வரவேற்றது, கண்டனத்திற்குரியது. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் தவறு செய்ததால் லஞ்ச ஒழிப்பு சோதனை நடக்கிறது.
இவ்வாறு வைகோ கூறினார்.

Next Story