பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு

x
தினத்தந்தி 25 Oct 2021 1:48 AM IST (Updated: 25 Oct 2021 1:48 AM IST)
மதுரையில் பூட்டிய வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது.
மதுரை
மதுரை பெருங்குடியை அடுத்த சோளங்குருணி பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 46). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் தோட்ட வேலைக்கு சென்றுவிட்டார். திரும்பி வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் வீட்டின் உள்ளே இருந்த ஒரு பவுன் தங்க சங்கிலி, வெள்ளி பொருட்கள், மற்றும் ரூ.2 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் பெருங்குடி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





