வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி


வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி
x
தினத்தந்தி 28 Nov 2021 7:26 PM GMT (Updated: 28 Nov 2021 7:26 PM GMT)

திருமங்கலம் அருகே நடந்த வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருமங்கலம்,

திருமங்கலம் அருகே நடந்த வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பக்தர் பலி

மதுரை சிந்தாமணி வாழைத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 50). இவர் சம்பவத்தன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பாதயாத்திரை சென்றார். கூடக்கோவில் அருகே பாரப்பத்தி பகுதியில் நடந்து சென்றபோது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் சந்திரசேகர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த சந்திரசேகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விவசாயி சாவு

 இதேபோல் திருமங்கலம் அருகே உள்ள மாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (31). விவசாயி. சம்பவத்தன்று திருமங்கலத்தில் இருந்து மதுரைக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். மறவன்குளம் அருகே சென்றபோது அவருக்கு முன்னால் சென்ற சிறுவனின் சைக்கிள் மீது மோதினார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சிவக்குமார் தலையில் பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.. பின்பு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story