செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ மாணவர்கள் போராட்டம்


செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 2 Dec 2021 11:18 AM GMT (Updated: 2 Dec 2021 11:18 AM GMT)

மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்த கோரி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு மருத்துவக்கல்லூரியில் இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கொரோனா நோய்தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தள்ளி செல்கிறது. இதனால் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் 100 சதவீதம் டாக்டர்கள் இருக்க வேண்டிய நிலையில் தற்போது 65 சதவீதம் டாக்டர்கள் மட்டுமே பணியில் ஈடுபட்டு வரும் சூழ்நிலை உள்ளது.

இதனால் தங்களுக்கு பணிச்சுமை அதிக அளவில் உள்ளதாகவும், இதனை கருத்தில் கொண்டு அரசு கல்லூரியில் உடனடியாக மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலின் முறையை துரிதப்படுத்த கோரியும் வகுப்பை புறக்கணித்து முதுநிலை மாணவர்கள் 30-க்கும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

‘நீட்’ தேர்வு முடிவடைந்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் மத்திய அரசு உடனடியாக கவுன்சிலிங் முறையில் மாணவர்களை தேர்வு செய்து வகுப்புகளை தொடங்க வேண்டுமென கண்டன கோஷங்கள் எழுப்பினர்.


Next Story