பெண்ணிடம் 7½ பவுன் நகை பறிப்பு


பெண்ணிடம் 7½ பவுன் நகை பறிப்பு
x
பெண்ணிடம் 7½ பவுன் நகை பறிப்பு
தினத்தந்தி 3 Dec 2021 10:13 PM IST (Updated: 3 Dec 2021 10:13 PM IST)
t-max-icont-min-icon

பெண்ணிடம் 7½ பவுன் நகை பறிப்பு

போத்தனூர்

கோவை ஈச்சனாரி ராஜ விஜயநகரை சேர்ந்தவர் ஹரிராம பிரசாத். இவருடைய மனைவி வாசுகி (வயது27). இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. 

இவர்களுடன் வாசுகியின் தாய் சரஸ்வதியும் (78) வசித்து வருகிறார். ஹரிராமபிரசாத், வேலை விஷயமாக வெளியே சென்றார். வீட்டில் வாசுகி இருந்த போது மர்ம நபர்கள் 4 பேர் வந்தனர். அவர்கள் முகவரி கேட்பது போல் நடித்து வாசுகியின் வாயை பொத்தி அவர் கழுத்தில் அணிந்திருந்த 7½ பவுன் தங்க நகைகளை பறித்தனர். 

அப்போது வாசுகியின் மகள் அழத்தொடங்கியது. உடனே அந்த குழந்தையை மிரட்டி அமைதியாக இருக்க செய்து விட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் மதுக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

1 More update

Next Story