மனைவி பிரிந்து சென்றதால் கூலி தொழிலாளி தற்கொலை

x
தினத்தந்தி 9 Dec 2021 12:17 AM IST (Updated: 9 Dec 2021 12:17 AM IST)
மனைவி பிரிந்து சென்றதால் கூலி தொழிலாளி தற்கொலை
பொள்ளாச்சி
சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32). கூலி தொழிலாளி. இவர் திருமணமாகி குடும்பத்துடன் பொள்ளாச்சி அருகே உள்ள நடுப்புணியில் வசித்து வந்தார்.
இவர் அடிக்கடி மது குடித்ததால் மனைவி கோபித்துக் கொண்டு கேரளாவில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட மணிகண்டன் குடிபோதையில் வீட்டின் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து வடக்கிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





