குமரகோட்டம் முருகன் கோவில் உண்டியல் வசூல் ரூ.13½ லட்சம்

x
தினத்தந்தி 17 Dec 2021 5:39 PM IST (Updated: 17 Dec 2021 5:39 PM IST)
கந்தபுராணம் அரங்கேறிய புகழ் பெற்ற காஞ்சீபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் 4 மாதங்களுக்கு பிறகு கோவிலில் இருந்த 6 உண்டியல்கள் திறக்கப்பட்டு கோவில் பணியாளர்களால் எண்ணப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் முத்து ரெத்தினவேல் தலைமையிலும், கோவில் செயல் அலுவலர் பரந்தாம கண்ணன் மேற்பார்வையிலும் காணிக்கைகளை எண்ணும் பணி கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
இதில் ரூ.13 லட்சத்து 51 ஆயிரத்து 227 மற்றும் 33.700 கிராம் தங்கம், 1 கிலோ 277 கிராம் வெள்ளி பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியின் போது அறநிலையத்துறை ஆய்வாளர் பிரித்திகா உள்பட அறநிலையத்துறை அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





