விஷம் குடித்து தாய் மகள் தற்கொலை

விஷம் குடித்து தாய் மகள் தற்கொலை
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே விஷம் குடித்து தாய், மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மனவளர்ச்சி பாதிப்பு
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள டி.நல்லிகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் ரத்தினசபாபதி. இவரது மனைவி கலாமணி (வயது 65). மகள் பிரியா (39). ரத்தினசபாபதி கடந்த பல ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதையடுத்து மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட மகளுடன், கலாமணி தனியாக வசித்து வந்தார்.
வடுகபாளையத்தை சேர்ந்த உறவினர் ஒருவர் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்ததாக தெரிகிறது.
இதற்கிடையில் மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட பிரியாவினால் அடிக்கடி அக்கம், பக்கத்தில் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. மேலும் தனது மகளுக்கு திருமணம் ஆகவில்லை என்றும், தனக்கு பிறகு யார் மகளை கவனிப்பார்கள் என்று அக்கம், பக்கத்திலும், உறவினர்களிடமும் கலாமணி கூறியதாக தெரிகிறது.
விஷம் குடித்து தற்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கலாமணியின் வீட்டிற்கு உறவினர் ஒருவர் வந்தார். அப்போது வீட்டில் பூச்சி மருந்து பாட்டில் கிடந்து உள்ளது.
மேலும் கலாமணியும், பிரியாவும் பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்றனர்.
பின்னர் தற்கொலை செய்து கொண்ட 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மனவளர்ச்சி பாதித்த மகளுக்கு தனக்கு பிறகு ஆதரவு இல்லாத விரக்தியில் விஷம் குடித்து 2 பேரும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. பொள்ளாச்சி அருகே தாய், மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story






