தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை


தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
x
தினத்தந்தி 24 Dec 2021 1:48 PM GMT (Updated: 24 Dec 2021 1:48 PM GMT)

தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை


சரவணம்பட்டி

2 மனைவியும் பிரிந்து சென்றதால் வேதனை அடைந்த தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

2 திருமணம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரவேனுவை சேர்ந்தவர் போஜன். இவருடைய மகன் ஜெகேந்திரகுமார் (வயது 48). இவர் சென்னையில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார். 

இவர், கடந்த 2006 -ம் ஆண்டு ஆஷா என்பவரை திருமணம் செய்தார்.

அதன்பிறகு 2½ ஆண்டுகளில் அவர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்தனர். 

இதைய டுத்து ஜெகேந்திரகுமார், 2013-ம் ஆண்டு அனு ராமச்சந்திரன் என்ற பெண்ணை 2- வதாக திருமணம் செய்தார். சில ஆண்டுகளில் அவரும் விவாகரத்து பெற்று பிரிந்து சென்றார். 

தூக்கில் பிணம்

இந்த நிலையில் ஜெகேந்திரகுமார் கடந்த 2018-ம் ஆண்டு சென்னை யில் இருந்து கோவை சரவணம்பட்டி சிவசக்தி நகரில் தனியாக வீடு எடுத்து தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். 

2 திரு மணம் செய்தும் விவாகரத்து பெற்று 2 மனைவிகளும் பிரிந்து சென்றதால் அவர் மனவேதனையில் இருந்தார்.

இதற்கிடையே நேற்று முன்தினம் ஜெகேந்திரகுமாரை அவருடைய தம்பி பிரதீப்குமார் (46) செல்போனில் பலமுறை அழைத்துள்ளார். ஆனால் அவர் செல்போனை எடுக்க வில்லை.

 எனவே அவர், ஜெகேந்திரகுமார் வசித்த வீட்டு உரிமையாளரை அழைத்து பேசினார்.

உடனே அவர், ஜெகேந்திரகுமாரின் வீட்டிற்கு சென்று பார்த்தார். அங்கு ஜெகேந்திரகுமார் வீட்டில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கி கொண்டு இருந்தது தெரியவந்தது. 

விசாரணை

இது குறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் விரைந்து வந்து ஜெகேந்திரகுமாரின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், 2 மனைவிகளும் பிரிந்து சென்றதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஜெகேந்திரகுமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.


Next Story