கோவிலில் திருட முயன்ற வாலிபர் கைது

x
தினத்தந்தி 3 Jan 2022 10:01 PM IST (Updated: 3 Jan 2022 10:01 PM IST)
கோவிலில் திருட முயன்ற வாலிபர் கைது
ஆனைமலை
ஆனைமலையை அடுத்த சேத்துமடை பகுதியை சேர்ந்தவர் ஜேசுதாஸ் (வயது26). கூலி தொழிலாளி. இவர் நேற்று அதிகாலை அதே பகுதியில் உள்ள அண்ணா நகர் மாகாளி அம்மன் கோவில் மதில் சுவர் மீது ஏறி குதித்துள்ளார். பின்னர் கோவில் கதவை உடைத்து திருட முயற்சி செய்ததாக தெரிகிறது.
அப்போது அங்கு வந்த பொது மக்கள் ஜேசுதாசை கையும் களவுமாகப் பிடித்து ஆனைமலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய ஆனைமலை போலீசார் ஜேசுதாசை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





