விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை

x
தினத்தந்தி 5 Jan 2022 10:04 PM IST (Updated: 5 Jan 2022 10:04 PM IST)
விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை
ஆனைமலை
ஆனைமலையை அடுத்த கோட்டூர் அருகே உள்ள பொங்காளியூரை சேர்ந்தவர் சண்முக சுந்தரம். இவருடைய மனைவி வள்ளியம்மாள்(66). இவர் கடந்த சில மாதங்களாக தூக்கமின்மையால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வள்ளியம்மாள் நேற்று காலையில் விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதை கண்ட உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே வள்ளியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





