அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் சாவு

x
தினத்தந்தி 6 Jan 2022 9:43 PM IST (Updated: 6 Jan 2022 9:43 PM IST)
அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் சாவு
நெகமம்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்தவர் தங்கபாண்டி(வயது 45). இவர் நெகமம் அருகே உள்ள கப்பளாங்கரையில் தங்கியிருந்து, கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த தங்கபாண்டி, கப்பளாங்கரையில் உள்ள ஒரு பஸ் நிறுத்தத்தில் மயங்கி கிடந்தார்.
உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் தங்கபாண்டி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





