செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 816 பேர் பாதிப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 816 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 7 Jan 2022 2:03 PM GMT (Updated: 7 Jan 2022 2:03 PM GMT)

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 816 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 77 ஆயிரத்து 689-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 72 ஆயிரத்து 702 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2550- ஆக உயர்ந்துள்ளது. 2,437 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 185 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 76 ஆயிரத்து 686 -ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 74 ஆயிரத்து 796 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 1,268 பேர் உயிரிழந்துள்ளனர். 622 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story