பொங்கல் பண்டிகையையொட்டி ஊராட்சிகளில் சிறப்பு பணிகள்


பொங்கல் பண்டிகையையொட்டி ஊராட்சிகளில் சிறப்பு பணிகள்
x
தினத்தந்தி 13 Jan 2022 8:20 AM GMT (Updated: 13 Jan 2022 8:20 AM GMT)

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்திற்குட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் வரவிருக்கும் 2022-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய கட்டிடங்கள் மற்றும் கிராம ஊராட்சி மன்ற கட்டிடங்களுக்கு வண்ணம் பூசுதல், ஊராட்சி மன்ற கட்டிடங்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய கட்டிடங்களை தூய்மைப்படுத்துதல், கிராம ஊராட்சிகள் தோறும் வேம்பு, புங்கன், மா, கொய்யா போன்ற பலன் தரும் 100 மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மேலும் கிராம ஊராட்சிகள் தோறும் ஓமைக்ரான் நோய் பரவலை தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பொதுமக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story