செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,854 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,854 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.
2,854 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 2,854 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 94 ஆயிரத்து 350 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 77 ஆயிரத்து 74 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.
இதுவரை 2,559 பேர் உயிரிழந்துள்ளனர். 14,717 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சீபுரம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 697 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81 ஆயிரத்து 379 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 76 ஆயிரத்து 52 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 1,275 பேர் உயிரிழந்துள்ளனர். 4,052 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story