காதல் திருமணம் செய்த பெண் வக்கீல் மர்ம சாவு

காதல் திருமணம் செய்த பெண் வக்கீல் மர்மமான முறையில் இறந்தார்.
முசிறி
கரூர் பிரதட்ணம் ரோடு பகுதியை சேர்ந்தவர் வீரமணி. இவருக்கு 3 மகள்கள். அவர்களில் 3-வது மகள் சங்கீதா. இவர் கோவையில் உள்ள சட்டக்கல்லூரியில் படித்தார். அப்போது அவரும், முசிறி இந்திரா நகரை சேர்ந்த சேகர் மகன் ரமேசும்(வயது 38) காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் ரமேஷ் வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் முசிறி கோர்ட்டில வக்கீலாக பணியாற்றி வந்தனர்.
மர்ம சாவு
இந்த தம்பதிக்கு குழந்தை இல்லாததால், ரமேஷ் வீட்டில் சங்கீதாவை கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 20-ந் தேதி காலை ரமேஷ், சங்கீதாவின் அக்காவிற்கு போன் செய்து சங்கீதா உடல்நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வீரமணி, மகளை பார்த்தபோது அவரது தலையில் பலத்த காயம் இருந்தது தெரிய வந்தது. எனவே, தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், மகளை அடித்து கொன்று விட்டதாகவும் முசிறி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் விதுன்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story