புதிதாக 757 பேருக்கு கொரோனா தொற்று


புதிதாக 757 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 23 Jan 2022 8:36 PM GMT (Updated: 23 Jan 2022 8:36 PM GMT)

புதிதாக 757 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது

திருச்சி
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று 3-வது அலை வேகமாக பரவி வருகிறது. திருச்சி மாவட்டத்திலும் தற்போது கொரோனா  நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் திருச்சி அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆர்.டி.-பி.சி.ஆர். என்னும் கொரோனா பரிசோதனை 4,724 பேருக்கு மேற்கொள்ளப்பட்டது. இதில் நேற்று 757 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 87,320 ஆக உயர்ந்துள்ளது.
4,475 ஆக உயர்வு
கொரோனாவுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 73 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,119 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 4,475 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதே நேரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 502 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 81,726 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.


Next Story