ஆய்வக உதவியாளர் தற்கொலை


ஆய்வக உதவியாளர் தற்கொலை
x
தினத்தந்தி 24 Jan 2022 4:59 PM GMT (Updated: 24 Jan 2022 4:59 PM GMT)

அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர் தற்கொலை செய்துகொண்டார்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் அருகே உள்ள பட்டணம்காத்தான் பகுதியை சேர்ந்த கமலமுத்து என்பவரின் மகன் கார்த்திக் குமார் (வயது 31). இவர் ராமநாதபுரம் அருகே உள்ள ஆர்.காவனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் குடும்ப பிரச்சினை, கடன் பிரச்சினை காரணமாக மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story