செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,742 பேர் பாதிப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,742 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 25 Jan 2022 1:33 PM GMT (Updated: 25 Jan 2022 1:33 PM GMT)

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 1,742 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 14 ஆயிரத்து 95-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 94 ஆயிரத்து 134 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.

நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,587 -ஆக உயர்ந்துள்ளது. 17 ஆயிரத்து 374 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 555 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 87 ஆயிரத்து 859 -ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 81 ஆயிரத்து 472 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 1,283 பேர் உயிரிழந்துள்ளனர். 5,104 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story