தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை
தூக்குப்போட்டு விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உத்திரமேரூர் ஒன்றியம் பெருநகரை அடுத்த மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் திருமலை (வயது 48). விவசாயி. இவருக்கு கலா என்ற மனைவியும் கல்லூரி படிக்கும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். திருமலைக்கு நீண்ட நாட்களாக வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த திருமலை தனது வீட்டுக்கு அருகே உள்ள முள்புதரில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது மனைவி கலா பெரு நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். உடலை கைப்பற்றிய சப்-இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Related Tags :
Next Story