தேன்கனிக்கோட்டை அருகே மொபட் மீது டிராக்டர் மோதி பெண் சாவு
தேன்கனிக்கோட்டை அருகே மொபட் மீது டிராக்டர் மோதி பெண் இறந்தார்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பெட்டமுகிலாலம் இருளர் காலனியை சேர்ந்தவர் வீரபத்திரப்பா. இவருடைய மனைவி கவுரம்மா (வயது 42). சம்பவத்தன்று இவர் மொபட்டில் கோட்டையூர் கொல்லையில் இருந்து பெட்டமுகிலாலம் நோக்கி வந்துகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டர் மொபட் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சைக்கு முடிந்து வீடு திரும்பிய அவர் திடீரென இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story