விபத்தில் ஒருவர் சாவு


விபத்தில் ஒருவர் சாவு
x
தினத்தந்தி 26 Jan 2022 11:26 PM IST (Updated: 26 Jan 2022 11:26 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூரில் விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பத்தூர், 
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த அப்துல்லா மகன் சையதலி (வயது49). இவர் நேற்று இரவு திருப்பத்தூர் அருகே காரையூர் செல்லும் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் அமர்ந்து அலைபேசியில் பேசிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது காரையூரில் இருந்து திருப்பத்தூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த காரையூரை சேர்ந்த நாகராஜ் மகன் ராஜா (29) எதிரே வாகனம் வந்ததால் நிலை தடுமாறி அப்துல்லா மீது மோதி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ராஜா திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து  கண்டவராயன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 More update

Next Story