சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு
தினத்தந்தி 26 Jan 2022 8:08 PM GMT (Updated: 26 Jan 2022 8:08 PM GMT)
Text Sizeசிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
குளித்தலை,
கடவூர் அருகே உள்ள வீரணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 24), பெயிண்டர். இவர் கடந்த 5-ந் தேதி 17 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து கடவூர் சமூக நல அலுவலர் செல்லம்மாளுக்கு தகவல் தெரியவந்துள்ளது. இதையடுத்து சிறுமிக்கு திருமணமானது குறித்து குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சுபாஷ் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire