592 பேருக்கு கொரோனா


592 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 27 Jan 2022 1:59 AM IST (Updated: 27 Jan 2022 1:59 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மாவட்டத்தில் புதிதாக 592 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

மதுரை, 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் நேற்று புதிதாக 29 ஆயிரத்து 976 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. மதுரை மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று, புதிதாக 592 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் இருந்த 678 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் பல்வேறு அறிவுரைகளை வழங்கி கண்காணித்து வருகின்றனர். இதுவரை மதுரை மாவட்டத்தில் 87 ஆயிரத்து 118 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 81 ஆயிரத்து 11 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். தற்போது, மதுரை மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்து 4 ஆயிரத்து 901 ஆக உள்ளது. அவர்களில் 3 ஆயிரத்து 300 பேர் வீட்டு தனிமைப்படுத்துதலிலும், மீதமுள்ளவர்கள் கொரோனா கண்காணிப்பு மையங்கள், தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையில் இருக்கிறார்கள்.
கொரோனா பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 77 வயது முதியவர் உயிரிழந்தார். இதன் மூலம் மதுரையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1206 ஆக உயர்ந்துள்ளது.


1 More update

Next Story