தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: நாமக்கல், ராசிபுரத்தில் சுவர் விளம்பரங்கள் அழிப்பு


தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: நாமக்கல், ராசிபுரத்தில் சுவர் விளம்பரங்கள் அழிப்பு
x
தினத்தந்தி 27 Jan 2022 6:18 PM GMT (Updated: 27 Jan 2022 6:18 PM GMT)

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: நாமக்கல், ராசிபுரத்தில் சுவர் விளம்பரங்கள் அழிப்பு

நாமக்கல்:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் 5 நகராட்சிகளில் 153 வார்டு உறுப்பினர் பதவிக்கும், 19 பேரூராட்சிகளில் 294 வார்டு உறுப்பினர் பதவிக்கும் என மொத்தம் 447 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. அந்தந்த நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து இருப்பதால் சுவரொட்டிகளை அகற்றும் பணி, சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணியும் தொடங்கி உள்ளது. நாமக்கல் நகரில் உள்ள மேம்பாலங்களில் இருந்த சுவர் விளம்பரங்களை நகராட்சி பணியாளர்கள் நேற்று வெள்ளை அடித்து அழித்தனர். அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்களை அவர்களே அகற்றி கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல் ராசிபுரம் நகராட்சியிலும் தேர்தலை முன்னிட்டு சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணி நடந்தது. இதையொட்டி சேலம் சாலையில் உள்ள ரெயில்வே மேம்பால சுவர்களில் எழுதப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை நகராட்சி பணியாளர்கள் அழித்தனர்.

Next Story