கந்தம்பாளையம் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை

கந்தம்பாளையம் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை
கந்தம்பாளையம்:
கந்தம்பாளையம் அருகே உள்ள இரும்பு பாலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பு தேவர் (வயது 75). இவருடைய மனைவி இறந்து விட்டதால் தனது மகன்களுடன் முறுக்கு வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு சமீபகாலமாக அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை என்று தெரிகிறது. இதனால் வெறுப்படைந்த கருப்பு தேவர் நேற்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதையடுத்து குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Related Tags :
Next Story