கபிலர்மலை அருகே கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை


கபிலர்மலை அருகே கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 28 Jan 2022 6:15 PM GMT (Updated: 28 Jan 2022 6:15 PM GMT)

கபிலர்மலை அருகே கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை

பரமத்திவேலூர்:
கபிலர்மலை அருகே பெரிய சோளிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 49). கூலித்தொழிலாளி. இவருக்கு கடந்த 17-ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததாக கூறப்படுகிறது. 
இதையடுத்து அவர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் கடந்த 20-ந் தேதி சிகிச்சைக்காக சேர்ந்தார். பின்னர் கடந்த 26-ம் தேதி சிகிச்சை முடிந்து வீட்டுக்கு சென்றார். பின்னர் அவருக்கு உடல் வலி, சோர்வு இருப்பதாக தனது மனைவி மகேஷ்வரியிடம் தெரிவித்துள்ளார். 
இந்த நிலையில் செல்லத்துரை நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் பெரிய சோளிபாளையம் பகவதி அம்மன் கோவில் பகுதிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்த பொது கிணறு அருகே சென்று தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பொது கிணற்றில் குதித்து தத்தளித்தார். இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் இதுகுறித்து நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி பார்த்த போது செல்லத்துரை இறந்து விட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவரது உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர் இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் போலீசார் அங்கு சென்று செல்லத்துரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story