புதிதாக 1,696 பேருக்கு கொரோனா
புதிதாக 1,696 பேருக்கு கொரோனாபுதிதாக 1,696 பேருக்கு கொரோனா
கோவை
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் புதிதாக 1,696 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 3 லட்சத்து 18 ஆயிரத்து 288 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல, கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த 3,621 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் கோவையில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 94 ஆயிரத்து 88 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனோ தொற்றினால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 82 வயது முதியவர், 77 வயது முதியவர், 58 வயது ஆண் ஆகிய 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் மாவட்டதில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 574 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 21 ஆயிரத்து 626 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story






