முக்கிய நபரிடம் இருந்து ரூ 1½ லட்சம் சொகுசு கார் பறிமுதல்

கல்குவாரி உரிமையாளரிடம் ரூ.15 லட்சம் பறித்த வழக்கில் முக்கிய நபரிடம் இருந்து ரூ.1½ லட்சம் பணம் மற்றும் சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
கிணத்துக்கடவு
கல்குவாரி உரிமையாளரிடம் ரூ.15 லட்சம் பறித்த வழக்கில் முக்கிய நபரிடம் இருந்து ரூ.1½ லட்சம் பணம் மற்றும் சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
7 பேர் கைது
கிணத்துக்கடவு அருகே காந்திநகரைச் சேர்ந்தவர் பஞ்சலிங்கம். இவர் கல்குவாரி நடத்தி வருகிறார். கடந்த மாதம் 15-ந் தேதி இவருடைய வீட்டிற்கு வந்த நபர்கள் வருமானவரித்துறை அதிகாரிகள் என்றுக்கூறி நடித்து பஞ்சலிங்கத்திடம் இருந்து ரூ.15 லட்சத்தை பறித்துச்சென்றனர்.
இது குறித்த புகாரின் பேரில் கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் முக்கிய நபரான மேத்யூ, மகேஸ்வரன், பைசல் ஆகியோர் தலைமறைவாக இருந்தனர். அவர்களை போலீசார் தேடி வந்தனர்.
காவலில் எடுத்து விசாரணை
இந்த நிலையில் மேத்யூ பொள்ளாச்சி கோர்ட்டில் சரண் அடைந் தார். இதையடுத்து அவரை போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதில் பெயிண்டிங் கான்ட்ராக்ட் எடுத்து வேலை செய்து வரும் மேத்யூவுக்கு போதிய வருமானம் இல்லாததால், வருமானவரித் துறை அதிகாரிகள் போல நடித்து பஞ்சலிங்கத்திடம் பணத்தை பறித்ததும், அதில் பங்கு வைத்ததில் மேத்யூவுக்கு ரூ.3 லட்சம் கிடைத்து உள்ளது.
பணம், கார் பறிமுதல்
அந்த பணத்தை வைத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து ரூ.1½ லட்சம் பணம் மற்றும் ஒரு சொகுசு காரை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story






