செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,097 பேர் பாதிப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,097 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 4 Feb 2022 4:52 PM IST (Updated: 4 Feb 2022 4:52 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 1,097 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 29 ஆயிரத்து 328 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 2 லட்சத்து 15 ஆயிரத்து 359 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,630 ஆக உயர்ந்துள்ளது. 11,339 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 323 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 92 ஆயிரத்து 823 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 87 ஆயிரத்து 757 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,288 ஆக உயர்ந்துள்ளது. 3,778 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

1 More update

Next Story