வாய்க்காலில் மிதந்த பெண் பிணம்

x
தினத்தந்தி 5 Feb 2022 9:29 PM IST (Updated: 5 Feb 2022 9:29 PM IST)
வாய்க்காலில் மிதந்த பெண் பிணம்
நெகமம்
நெகமத்தை அடுத்த அனுப்பர்பாளையம் பி.ஏ.பி.வாய்க்காலில் பெண் பிணம் கிடந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் நெகமம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பொதுமக்கள் உதவியுடன் வாய்க்காலில் மிதந்த பெண்ணின் உடலை தேடினர். அனுப்பர்பாளையம் கல்குவாரி அருகே உள்ள வாய்க்காலில் சட்டர் அருகே அந்த பெண்ணின் உடல் சிக்கியது.
இதனை தொடர்ந்து உடலை மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





