வயதான தம்பதி விஷம் குடித்து தற்கொலை
வயதான தம்பதி விஷம் குடித்து தற்கொலைவயதான தம்பதி விஷம் குடித்து தற்கொலை
போத்தனூர்
தங்களை கவனிக்க யாரும் இல்லாததால் நோயால் அவதிப்பட்ட வயதான தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது.
இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:-
கோவையை அடுத்த மதுக்கரை அரிசிபாளையத்தை சேர்ந்தவர் பார்த்தலோமியோ (வயது64). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி மனோன்மணி (60). இவர்களு டைய மகன் ஜான் பாஸ்கோ பிரான்சிஸ் சென்னையில் சினிமா துறையில் எடிட்டராக உள்ளார்.
இந்த நிலையில், பார்த்தலோமியா நரம்பு சம்மந்தமான நோயாலும், மனோன்மணி மார்பக புற்றுநோயாலும் அவதிப்பட்டு வந்தனர். இதற்கு அவர்கள் மருத்துவமனைகளில் சிசிச்சை பெற்று வந்தனர். அவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்றதால் செலவு அதிகமானது.
இதனால் அவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற செலவு செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். வயோதிகம், உடல்நலக்குறைவு, நோய் என்று பாதிக்கப்பட்ட நிலையில் பராமரிக்க யாரும் இல்லாத தால் அவர்கள் வாழ்க்கையில் விரக்தி அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து அவர்கள் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி சம்பவத்தன்று அந்த வயதான தம்பதி விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தனர்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக சென்னையில் உள்ள அவரது மகனுக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பார்த்தலோமியோ, அவருடைய மனைவி மனோன்மணி ஆகிய 2 பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நோய் மற்றும் கவனிக்க யாரும் இல்லாத நிலையில் வயதான தம்பதி தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
Related Tags :
Next Story






