லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது

x
தினத்தந்தி 25 Feb 2022 9:54 PM IST (Updated: 25 Feb 2022 9:54 PM IST)


லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தோகைமலை
கரூர் மாவட்டம், தோகைமலை காவல் சரகத்திற்கு உட்பட்ட தோகைமலை கடைவீதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் கடைவீதி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு லாட்டரி சீட்டுகள் விற்ற கடை வீதி வடக்கு தெருவைச் சேர்ந்த சேகர்( வயது 48), அதே தெருவை சேர்ந்த மோகன்ராஜ் என்ற சோமாஸ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire