மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் தூக்குப்போட்டு தற்கொலை


மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 25 Feb 2022 10:05 PM IST (Updated: 25 Feb 2022 10:05 PM IST)
t-max-icont-min-icon

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் தூக்குப்போட்டு தற்கொலை

திருப்பூர், 
திருப்பூரில் மாநகராட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளராக போட்டியிட்டவர், குறைந்த வாக்குகள் பெற்ற விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்
திருப்பூர் காலேஜ் ரோடு கொங்கணகிரி பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 55). சுமை தூக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி சுப்பாத்தாள் (50). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். 2 பேருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. மணி மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர். இவர் பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
திருப்பூர் மாநகராட்சியில் 36-வது வார்டு கவுன்சிலர் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளராக மணி போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கை முடிவில் மணி,   44 வாக்குகள் பெற்றார். 36-வது வார்டில் தி.மு.க. வெற்றி பெற்றது. அந்த வார்டில் 8 பேர் போட்டியிட்டதில் மணி குறைந்த வாக்குகளே பெற்றார்.
தூக்குப்போட்டு தற்கொலை
தேர்தலில் குறைந்த வாக்குகள் பெற்றதால் மணி, மனம் உடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். மேலும் தேர்தலில் நின்றதால் மணிக்கு கடன் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சுப்பாத்தாள் தனது சகோதரர் வீட்டுக்கு சென்று விட்டார். இரவு வீட்டில் மணி மட்டும் இருந்துள்ளார். நேற்று காலை சுப்பாத்தாள் வந்து பார்த்தபோது வீட்டுக்கதவு உட்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. உடனடியாக திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி மற்றும் போலீசார் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மணி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
குறைந்த வாக்கு பெற்றதால் விரக்தி
மணி உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், தேர்தலில் மிக குறைந்த வாக்குகள் பெற்ற விரக்தியிலும், கடன் பிரச்சினை ஏற்பட்டதாலும் மனம் உடைந்து, மணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தேர்தலில் குறைந்த வாக்குகள் பெற்ற விரக்தியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 More update

Next Story