செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 55 பேர் பாதிப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 55 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 27 Feb 2022 2:57 PM GMT (Updated: 27 Feb 2022 2:57 PM GMT)

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 55 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 34 ஆயிரத்து 945 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 2 லட்சத்து 31 ஆயிரத்து 612 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 2,656 பேர் உயிரிழந்துள்ளனர். 677 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 16 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 94 ஆயிரத்து 269 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 92 ஆயிரத்து 744 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 1,302 பேர் உயிரிழந்துள்ளனர். 223 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story