பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ29 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை

பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ29 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை
முத்தூர்,
பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.29 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.
பழையகோட்டை மாட்டுத்தாவணி
நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை மாட்டுத்தாவணியில் உலகிலேயே வீரத்திற்கும், கம்பீரத்திற்கும் புகழ் பெற்ற காங்கேயம் இன காளைகள், கன்றுகள், பசுமாடுகள் விற்பனை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது.
இதன்படி நேற்று நடைபெற்ற சந்தையில் திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், கோவை, திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த காங்கேயம் இன காளைகள் வளர்ப்போர், நாட்டு மாடுகளை வளர்க்கும் விவசாயிகள், காங்கேயம் இன காளை பராமரிப்பு விருத்தியாளர்கள் கலந்து கொண்டு காங்கேயம் இன பெரிய பூச்சி காளைகள், இளம் பூச்சி காளைகள், செவலை பசுமாடுகள், மயிலை பூச்சி காளைகள், மயிலை பசுமாடுகள், மயிலை கிடாரிகள், காராம்பசு கிடாரி கன்றுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். அதன்படி மொத்தம் 128 மாடுகளில் 75 மாடுகள் விற்பனை செய்யப்பட்டது. இந்த 75 மாடுகளும் ரூ.29 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இதன்படி சந்தையில் அதிகபட்சமாக காங்கேயம் இன மயிலை பசுமாடு ரூ.1 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
புற்கள்
திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக கிராமப்பகுதிகளில் கொழுக்கட்டை புல் வளர்ந்துள்ளன.
இதனால் காங்கேயம் இன மாடுகள் விற்பனை வழக்கத்தைவிட அதிகளவில் விற்பனை ஆகியது.
Related Tags :
Next Story