திருப்பத்தூர் அருகே வீட்டில் நிறுத்தி வைத்திருந்த சொகுசு கார் பட்டப்பகலில் திருட்டு

திருப்பத்தூர் அருகே வீட்டில் நிறுத்தி வைத்திருந்த சொகுசு காரா மர்ம நபர்கள் பட்டப்பகலில் திருடிச்சென்று விட்டனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே உள்ள தாயப்பன் நகரை சேர்ந்தவர் ராமநாதன் இவரது மகன்கள் கலைச்செல்வன், பவித்ரன். ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்க்கின்றனர். இவர்களுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தை பதிவு செய்ய தங்களுக்கு சொந்தமான சொகுசு காரில் சென்று திருமண பதிவுச் சான்று பெற்றுக்கொண்டு நேற்று மதியம் 1.30 மணி அளவில் வீட்டிற்கு வந்ததனர். காரை வீட்டில் நிறுத்தி இரும்பு கேட்டை பூட்டி, வீட்டில் உள்ள பூஜை அறையில் கார் சாவியை வைத்து விட்டு மற்றொரு அறையில் இருந்தனர்.
பின்னர் மதியம் 3 மணி அளவில் வெளியே வந்து பார்த்தபோது காரை காணவில்லை. பூஜை அறையில் வைத்திருந்த கார் சாவியையும் காணவில்லை. மர்ம நபர்கள் பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து சாவியை எடுத்து காரை திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்து கந்திலி போலீஸ் நிலையத்தில் பவித்திரன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து அந்தப்பகுதியில் உள்ள கணகாணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறார். பட்டப்பகலில் சொகுசு காரை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story