கோவையில் வீடுபுகுந்து 10 பவுன் நகை திருட்டு


கோவையில் வீடுபுகுந்து 10 பவுன் நகை திருட்டு
x
கோவையில் வீடுபுகுந்து 10 பவுன் நகை திருட்டு
தினத்தந்தி 4 March 2022 9:57 PM IST (Updated: 4 March 2022 9:57 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் வீடுபுகுந்து 10 பவுன் நகை திருட்டு

கோவை

கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ். காலனி காந்தி நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 36). லேப் டெக்னீசியன்.இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, தனது குடும்பத்தினருடன் சிவராத்திரி விழாவுக்காக தென்காசி மாவட்டம்  சங்கரன் கோவிலுக்கு சென்று விட்டார். 

பின்னர் வீட்டுக்கு திரும்பியபோது அவரது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.
1 More update

Next Story